செவ்வாய், 27 நவம்பர், 2012

அலிஃப் என்ற உயிரெழுத்தும் பி.ஜே அவர்களின் பிழைக்கோட்பாடும்


சகோதரர் பி.ஜே அவர்கள் தனது தர்ஜுமாவில் எழுதியது:

இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது(பார்க்கதிருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறுபி.ஜே தர்ஜுமா)
சகோ.பி.ஜே அவர்கள் பிழை என்று குறிப்பிட்டவற்றில் பின் வரும் வார்த்தைகள் நமது சிந்தனைக்குட்பட்டதாகும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

தவ்ஹீத் ஜமாஅத்திடம் விவாதிக்கத் தயாரா?

பி.ஜே மற்றும் ததஜ வினர் நாங்கள் தான் விவாதம் செய்பவர்கள், மற்றவர்கள் எங்களை விட்டும் விரண்டோடி விடுவார்கள் என்ற ஒரு மாயையை இன்னும் தொடர்ந்து காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பெங்களூர் DIET குழுவினரைடன் விவாதம் என்று ஒப்பந்தம் போட்டு விவாதம் நடக்காமல் இருக்க எல்லா வழிமுறைகளையும் கையாண்டு கடைசியில் அவர்கள் ஓட்டம் எடுத்தார்கள் என்று ஆன்லைப் பி.ஜே இணைய தளத்தில் ஓட விட்டார்கள். அதன் உண்மை நிலையை விளக்கி DIET சகோதரர்கள் விளக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதில் ததஜ வின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகிறது. அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய அருமையான ஒளிப்படம்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

எழுத்தின் மரபைக் குறித்த அறியாமை

ரபு மொழியின் இன்றைய எழுத்து முறைக்கும் குர்ஆனிய எழுத்து முறைக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.  அதன் காரணமாகவே இன்ன பிற அரபுப் புத்தகங்கள் பத்திரிக்கைகள் அச்சிடப்படுவதைப் போல குர்ஆனை அச்சிடுவதற்கு கணினி அச்சுக் கோர்வை பயன்படுத்தப்படுவதில்லை.  இதை அறியாத சகோதரர் பி.ஜே அவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் என்று ஒரு பட்டியலைத் தந்துள்ளார்.  ஆனால் அவரது வாதப் படி அவை பிழை என்றிருப்பின் குர்ஆனுடைய ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிழைகள் என்று நூற்றுக் கணக்கான வார்த்தைகளைப் பட்டியலிட முடியும்.
ஆனால் நிஜாமுத்தீன் மன்பஈ குர்ஆனின் எழுத்து முறை என்று கூறியதை எழுத்துப் பிழையாக்கி மறுபதிவு செய்ததிலிருந்தே சகோதரர் பி.ஜே அவர்களின் அறியாமை வெளிப்படுகிறது.

செவ்வாய், 13 நவம்பர், 2012

எழுத்துப் பிழையையும் எழுத்து முறையையும் பிரித்தறிய இயலாத அறியாமை!

நாகரீகத்தின் வளர்ச்சிக்கேற்ப மக்களின் மொழி வழக்கிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. இது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும். அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு குர்ஆன் அது அருளப்பட்ட மொழி வழக்கிலேயே ஓதப்படுவதும் அந்த நிலையிலேயே அது ஏட்டளவில் பாதுகாக்கப்படுவதும் குர்ஆனிய மொழி இன்றளவும் உயிரோட்டத்துடன் இருப்பதும் அதன் இறைமைத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.  

திங்கள், 12 நவம்பர், 2012

குர்ஆன் தொகுப்பில் நபித்தோழர்கள் ஆற்றிய அரும்பணி

ஸைத் பின் ஃதாபித் (ரழி) அறிவிக்கின்றார்கள்:  (ஹதீஸ் சுருக்கப்பட்டுள்ளது)

 ...(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்'' என்று கூறினார்கள்.

வியாழன், 8 நவம்பர், 2012

ஓசை வடிவம் மட்டும்தான் பாதுகாக்கப்பட்டதா?

ன்று குர்ஆனில் எழுத்துப் பிழை என்று வாதிடும் சகோ.பி.ஜே அவர்கள் குர்ஆனை அல்லாஹ் ஓசை வடிவில்தான் பாதுகாத்தான் என்று கூறி அதன் எழுத்து வடிவத்தைக் கொச்சைப் படுத்தியும் அதில் பிழை உள்ளது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே குர்ஆனை எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட அதன் கண்ணியத்தின் மீது ஏற்படுத்தும் ஒரு களங்கமாகும்.

திங்கள், 5 நவம்பர், 2012

குர்ஆனின் எழுத்துக் கலையும் அறியாமை வாதங்களும்.

குர்ஆனில் சில எழுத்துப் பிழைகள் என்று சகோ.பி.ஜே மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களால் செய்யப்படும் பிரச்சாரம் அதன் எழுத்துக் கலை குறித்த அறியாமையிலிருந்து உருவாகியுள்ளதைக் கண்டு வருகிறோம்.  குர்ஆனின் ஓதுதற்கலையையோ எழுத்துக்கலையையோ இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் சமீபத்தில் இவர்கள் விவாதித்தலிருந்து நாம் அறிந்து கொண்டது.

 புராதன அரபு மொழி எழுத்தின் கலைக்கு குர்ஆன் ஓர் அற்புத எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இலக்கண இலக்கியங்களையெல்லாம் விஞ்சி இறைவேதத்திற்கே உரிய மிடுக்குடன் மாறுதலின்றி தனித்து விளங்கும் அற்புத வேதம் குர்ஆன்.

 குர்ஆனின் எழுத்துக்கலைகள் குறித்து பல்வேறு கால கட்டங்களில் பல அறிஞர்களும் எழுதிய புத்தகங்கள் உள்ளன. குர்ஆனிய எழுத்துக்கலை என்பது ஒரு கடல். அதில் குறை காண்பது என்பது சிறுமைத் தனம் ஆகும்.

 குர்ஆனில் எழுத்துப் பிழைகள் என்று சகோ.பி.ஜே அவர்கள் முன்வைத்தவை எழுத்துப்பிழைகள் அல்ல என்றும் அது குறித்து அவர் அறியாமையில் இருக்கிறார் என்பதும் பல்வேறு மார்க்க அறிஞர்களால் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

குர்ஆனில் பிழைகள் என்று சகோ. பி.ஜே அவர்கள் பட்டியலிட்டதையும் குர்ஆனின் எழுத்துக் கலைப்படி அவை பிழைகள் அல்ல என்பதையும் இன்ஷா அல்லாஹ் இந்த ஆய்வுக் கட்டுரையில தொடராகக் காண்போம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

செவ்வாய், 2 அக்டோபர், 2012

அசத்தியவாதிகளை அடையாளம் காட்டும் சூனிய பத்வா!

 சூனியம் என்றொரு கலை உள்ளது. அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்விப்பது அனைத்துமே குப்ரை ஏற்படுத்தும் கொடிய குற்றங்களாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தினால் யாரும் யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது என்பது அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவாகும்.
 
நாங்கள்தான் சத்தியத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என கூறித் திரியும் ஒரு கும்பல், 'சூனியத்தினால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும்' என நம்புபவர்கள் முஷ்ரிக்குகளாவர், அவர்களுக்குப் பின்னால் தொழக் கூடாது, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யபட்டதை நம்புபவர்கள் முஷ்ரிக்குகள், சூனியத்தில் நுணுக்கமான ஷிர்க்குகள் இருக்கின்றன. இதை நாங்கள்தான் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறுகின்றோம். நாங்கள் சொன்ன விளக்கம் சென்றடையாதவர்கள் சூனியத்தை நம்பினால் முஷ்ரிக் இல்லை. சென்றடைந்தவர்கள் நம்பினால் முஷ்ரிக் என்றெல்லாம் உளறி வருகின்றனர்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மார்கத்தை தன் மனோஇச்சைப்படி வலைக்கும் பீ.ஜே அவர்கள்


மார்கத்தை தன் மனோஇச்சைப்படி வலைக்கும் பீ.ஜே அவர்கள்

By : Masoud bin Ahmed

அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.

மார்கத்தை தன் மனோ இச்சைப்படி வலைக்கும் பீ.ஜே அவர்கள், தனது தஃவாவை உலகம் முழுதும் செய்ய 'முயற்சி எடுக்க விரும்பவில்லை.' என்று தனது தளத்தில் கூறியுள்ளார். இப்படி இவர் சொல்வது சரியா? தவறா? என்பதை பார்ப்போம்.

இந்து மதக்கொள்கையில் 'பிரம்மா வின் தலையில் இருந்துப் பிறந்தவன் பிராமணன் , நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்ரியன், என்று பிரிப்பார்கள். அவர்கள் தமது மதம் தான் சரியானது என்றும் நினைப்பார்கள். சரி, அப்படி என்றால் அமெரிக்கர்கள் பிரம்மனின் எந்த பாகம் என்றாலோ , அல்லது ஆப்ரிக்கர் எந்த பாகம் என்றாலோ , அவர்களிடம் பதில் இருக்காது. இது எதோ இந்தியர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும் என்றால், உலக மக்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை !!! இதே போல்தான் பி ஜே அவர்களின் வாதமும் உள்ளது.

வெள்ளி, 4 மே, 2012

இப்னு அப்பாஸ் குறித்து யார் சொல்வது உண்மை?

இப்னு அப்பாஸ் குறித்து யார் சொல்வது உண்மை?

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நேரடி தர்பியாவில் வளர்க்கப்பட்டவர்கள்.  "யா அல்லாஹ் இவருக்கு  மார்க்கத்தில் ஞானத்தைக் கற்றுக்கொடு" என்று நபி (ஸல்) அவர்களால் சிறப்பாக துஆ செய்யப்பட்டவர்கள். (புகாரி: 3756)  குர்ஆனில் அவர்கள் பெற்ற ஞானத்தின் காரணமாக  உமர் (ரழி) போன்ற மூத்த ஸஹாபாக்களால் கூட முன்னிலைப் படுத்தப்பட்டவர் (புகாரி 4970)  குர்ஆன் தஃப்ஸீரில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் விளக்கத்தை முன்னிலைப் படுத்துகிறது முஸ்லிம் சமுதாயம். ஆம் அல்லாஹ்வின் தூதரால் சான்று வழங்கப்பட்டவர் அல்லவா? ஆனால் அந்தோ பரிதாபம்! ஸஹாபாக்கள் விமர்சனப்பட்டியலில் அவரும் விடுபடவில்லை.

சனி, 28 ஜனவரி, 2012

ஜமல் மற்றும் சிஃப்பீன் யுத்தம் - பி.ஜே அவர்களின் தவறான பிரச்சாரம்!

"நம்ம கூட வெட்டிகிட்டு சாவலையே! அவங்க அந்த வேலைய பண்ணியிருக்காங்களே!

கண்ணிய மிக்க ஸஹாபாக்களை இப்படி பி.ஜே விமர்சித்ததைச் சுட்டிக்காட்டினால் அவர் வரலாற்றைச் சொல்கிறார் என்று அவருக்கு ஒத்து ஓதுகின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்!! அல்லாஹ் அவர்களின் கண்களைத் திறப்பானாக! ஜமல் மற்றும் சிஃப்பீன் யுத்தம் பற்றிய பல உண்மைச் சம்பவங்களையும் மறைத்து தப்பும் தவறுமான தகவல்களைத் தருகிறார். பி.ஜே.