ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மார்கத்தை தன் மனோஇச்சைப்படி வலைக்கும் பீ.ஜே அவர்கள்


மார்கத்தை தன் மனோஇச்சைப்படி வலைக்கும் பீ.ஜே அவர்கள்

By : Masoud bin Ahmed

அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.

மார்கத்தை தன் மனோ இச்சைப்படி வலைக்கும் பீ.ஜே அவர்கள், தனது தஃவாவை உலகம் முழுதும் செய்ய 'முயற்சி எடுக்க விரும்பவில்லை.' என்று தனது தளத்தில் கூறியுள்ளார். இப்படி இவர் சொல்வது சரியா? தவறா? என்பதை பார்ப்போம்.

இந்து மதக்கொள்கையில் 'பிரம்மா வின் தலையில் இருந்துப் பிறந்தவன் பிராமணன் , நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்ரியன், என்று பிரிப்பார்கள். அவர்கள் தமது மதம் தான் சரியானது என்றும் நினைப்பார்கள். சரி, அப்படி என்றால் அமெரிக்கர்கள் பிரம்மனின் எந்த பாகம் என்றாலோ , அல்லது ஆப்ரிக்கர் எந்த பாகம் என்றாலோ , அவர்களிடம் பதில் இருக்காது. இது எதோ இந்தியர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும் என்றால், உலக மக்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை !!! இதே போல்தான் பி ஜே அவர்களின் வாதமும் உள்ளது.





இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்கும் வந்த மார்க்கம். இதில் மொழி, நாடு என்று அல்லாஹ் வேறு படுத்தாமல் இருப்பதே, இது உண்மையான மார்க்கம் என்பதற்கு அத்தாட்சியும் ஆதாரமும் ஆகும். ஒரு கொள்கை உண்மையான சத்தியமான கொள்கை என்றால், அது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்த வேண்டும். இஸ்லாம் மார்கத்தில் எத்தைனையோ பிரிவினர் வந்துசென்றுள்ளனர் . இதில் குறிப்பாக தமிழ் நாட்டில் பீ.ஜே அவர்கள் தானும் தன்னை சார்ந்த அமைப்பும் தான் உண்மையான தவ்ஹீத்? கொள்கை என்றும், மற்ற அமைப்புகள் எல்லாம் வழிகேடுகள் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கையை இவர்கள் கவனிக்கவேண்டும்.

அறிந்துகொள்ளுங்கள்! கஞ்சத்தனமும், பின்பற்றப்படும் மனோஇச்சையும், ஒருவன் தன்னைத்தானே பெரிதாகக் கருதுவதும் (நன்மைகளை) அழித்துவிடக்கூடியதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (அறிவிப்பாளர்:அனஸ்(ரழி) நூல்: பைஹகி)



தமிழகத்தை சார்ந்த எந்த தவ்ஹீத் அமைப்பும், தான் மட்டும்தான் உண்மையான கொள்கை என்று சொல்லிக்கொள்வதில்லை. நாங்கள் இயன்றவரை பிரச்சாரம் செய்கிறோம் என்றே கூறுகின்றன. உலகம் முழுவதும் தவ்ஹீத் கொள்கையை சொல்ல கூடியவர்கள் 1400 ஆண்டுகளாக இருந்து வருகின்றார்கள். கியாமத் நாள் வரையும் இன்ஷா அல்லாஹ் இருப்பார்கள் என்பது மார்க்கம் தெரிந்த 'கிணற்று தவளை' யாக இல்லாதவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் பீ.ஜே அவர்களின் தவ்ஹீத் கொள்கை வித்தியாசமானது தனிமையானது. பீ.ஜே வும் அவரின் கொள்கையை சார்ந்தவர்களும் தங்களைப்போல் உலகில் யாருமே இல்லை? என்றுதான் இவர்கள் பேச்சு எழுத்து பிரச்சாரம் போன்றவை உள்ளன.

அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜம்ஆ என்று சொல்லக்கூடிய புஹாரி, முஸ்லிம், திர்மிதி என்று ஏழு ஹதீஸ் புத்தகங்கள் மூலமாக குர்ஆனை சரியாக புரிந்துணர்ந்த அறிஞர்களில், புஹாரி இமாம் உட்பட, உலகஉம்மத் அனைவரும் ஸஹீஹ் புஹாரி புத்தகத்தில் உள்ள அனைத்து ஹதீஸ்களையும் நம்பினால், அவர்கள் எல்லோருமே அறியாமையில் அல்லாஹ்விற்கு இணை வைத்து விட்டார்கள் என்று இவர்கள் பேசுகிறார்கள். அதுவும் இது யாரும் அறியமுடியாத? இவர்கள் மாத்திரமே கண்டுபிடித்த? நுனுக்கமான ஷிர்க்காம்.


ஏன் என்றால் புஹாரி புத்தகத்தை முழுவதுமாக நம்பினால் சிஹ்ரையும் நம்ப வேண்டும். சிஹ்ரை (சூனியத்தை) நம்பினால் ஷிர்க் என்று சொல்கிறார்கள். இவர்கள் ஜமாத்தை சேர்ந்த அப்துந்நாசர் என்பவர் ' புஹாரி இமாம் அறியாமையினால் சிஹ்ரை நம்பி இருந்தார்கள்.' 'சிஹ்ரை நம்பினால் ஷிர்க் தான் ' 'ஆனால் இது குரானுக்கு முரண் என்ற நுட்பம் தெரியாமல் புஹாரி இமாம் சிஹ்ரை நம்பியதால், அவரை முஷ்ரிக் என்று சொல்ல முடியாது என்று '' வரும்ம்ம்ம்ம்... ஆனா வராதுதுதுதுதுது... !!!' என்பது போல ' ஷிர்க் தான்.. ஆனால் ஷிர்க் இல்லை ' என்று சொல்கிறார். இதே கருத்தை பிஜே வும் பல இடங்களில் பேசி வருகிறார். சரி, தர்காவுக்கு போகும் எல்லா மக்களும் 'ஷிர்க்' என்று தெரியாமல் தானே அங்கே செல்கிறார்கள். நுட்பம் தெரியவில்லை என்பதால், அவர்களும் ஷிர்க் செய்ய வில்லை என்று சொல்ல முடியுமா? இதில் வேறு தங்களை ஆய்வாளர்கள்? என்று கூறிக்கொள்கிரார்கள்.

பீ.ஜே மிக வெளிப்படையாக தனது அமைப்பு மட்டும் தான் சத்தியத்தில் இருப்பதாகவும், மற்ற அமைப்புகள் வழித்தவரியதாகவும் சொல்கிறார். இப்படி சத்தியம் அவரிடம் மட்டும் இருந்தால், இவர் உலகமுழுதும் தஃவாவை செய்யாமல் இருப்பது இவர் மீது பெரிய குற்றம் அல்லவா?.

ஆங்கிலத்தில் அல்லது அரபியில் ஏதாவது ஒரு ஆலிமை அடையாளமாக காட்டி 'இவரிடம் அரபி மொழி தெரிந்தவர்கள் அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்கள் மார்க்க கல்வியை கற்று கொள்ளலாம்' என்று வழிக்காட்டினாலும், இவர் உலகுக்கு தஃவா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், நாங்கள் சொல்லும் கொள்கையை அரபியிலும், ஆங்கிலத்திலும் அவர்கள் அங்கே பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூறிவிடலாம். அப்படி என்றுமே பீ.ஜே அவர்கள் யாரை பற்றியும் கூறியது கிடையாது. இனி கூறவும் மாட்டார். மட்டம் தட்டும் இவர் வாயிலிருந்து, எந்த ஆலிம்தான் தப்புவார்கள் ? சஹாபாக்கள் கூட இவர் வாயிலிருந்து தப்ப முடியவில்லையே? மற்ற உலமாக்கள் எம்மாத்திரம்?


அறிஞர்களை மட்டம் தட்டவும், அறிவிலிகளிடம் பெருமையடிக்கவும் கல்வியை கற்காதீர்கள்.
கல்வியின்மூலம் பதவிகளை தேடிக்கொள்ளாதீர்கள். இவ்வாறு ஒருவன் செய்தால் அவருக்கு
நரகமே! நரகமே! நரகமே! என நபி(ஸல்)கூறினர்கள். ஜாபிர்(ரழி) இப்னுமாஜா

இவ்வளவு கடுமையான எச்சரிக்கை, இவருக்கும் இவரது கூட்டத்திற்கும் தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்துதான் செய்கிறார்களா ?
அல்லாஹ்வே அறிந்தவன்.

இவர் உலகம் முழுதும் தனது செய்தியை எடுத்து செல்லமாட்டார் என்றால் , இவர் நிஜமாகவே தான் சத்தியத்தில் இருப்பதை தானே நம்ப வில்லை என்றுதான் அர்த்தமாகும் ஆகும். ஏன் என்றால் இவருக்கு ஆங்கிலம் தெரிய வில்லை என்றாலும், அரபு மொழி தெரியும். அரபு ஆலிம்களிடம் சென்று, இவரின் வித்தியாசமான கொள்கையான சிஹ்ரை மறுப்பது, ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுப்பது, அல்லாஹ் கீழ்வானத்திற்கு தினமும் வருவதில்லை என்பது, ஜக்காத்தை ஒருமுறை கொடுத்தால் போதும் என்பது ,EX ....EX .... ' போன்ற வற்றை சொல்லி , அரபு நாடுகளையும், இன்னும்பிற நாடுகளையும் ஷிர்க்கிலிருந்தும், பித்அத்திலிருந்தும் காப்பாற்ற பாடுபட வேண்டும். குறைந்தபச்சம் அரபியிலும், ஆங்கிலத்திலும் இது சம்மந்தமாக புத்தகங்களையாவது வெளியிடவேண்டும்.


ஏன் என்றால் சூனியத்தை நம்பினால் ஷிர்க் என்று இவரும் இவரது சகாக்களும் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இவரின் அகராதியில், உலகம் முழுவதும் இமாம் புஹாரி காலம் முதல் ஷிர்க் கில் இருக்கின்றார்கள் ???!! இவரும் இவருடைய சகாக்களும் ஹஜ் உம்ரா கூட செய்ய முடியாத நிலைமை உள்ளது. ஏன் என்றால் மக்கா வில் தொழ வைப்பவர் ' சூனியம்' என்பதை நம்பி தான் இருக்கிறார். அவரும் இவரின் அகராதியில் ஷிர்க் செய்பவர் தானே?

புகழ் வேண்டாம் என்பதினால் தான் பீ.ஜே உலகுக்கு பிரச்சாரம் செய்ய வில்லையாம் !!!!! என்ன அற்ப்புதம் !!!
அப்போது புழுக்காக தான் தமிழில் மட்டும் பிரச்சாரம் செய்கிறாரோ?

...“நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழிஎன்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல் குர் ஆண் 2:120)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.