வெள்ளி, 28 ஜூன், 2013

தடம் புரண்ட தடயங்கள் - 1986ல் பி.ஜேயின் ஸலஃபுக் கொள்கை (1)

வசீலா ஒரு விளக்கம்

அல்லாஹ்வுடைய இஸ்முகள் - பெயர்கள், அவனுடைய சிஃபத்துக்கள் - பண்புகள் எல்லாம் சொல்லி ரஹ்மானே! ரஹீமே! என்று பாராட்டுவதன் மூலமாக நமது தேவையைக் கேட்கலாம். இதுதான் ஸலஃபுஸ்ஸாலிஹீன்களுடைய நேர்வழி பெற்ற முன்னோர்களுடைய காலத்தில், ஸஹாபாக்கள் காலத்தில் வசீலா என்பதற்கு இருந்த பொருள். 

தடயம் : கோட்டாறில் சத்திய முழக்கம் (முனாழரா) நஜாத் வெளியீடு 1986.

1986ல் ஸலஃபுக் கொள்கையில் இருந்த பி.ஜே தடம் புரண்டது எப்போது?


வெள்ளி, 14 ஜூன், 2013

தமிழக தயாரிப்பு சவூதியில் செல்லுபடியாகுமா?

சூனியம் பற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை 14 நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சமுதாயம் நம்பி வருகின்றது. ஆனால் அப்படி நம்புவது இணைவைப்பு என்ற ஒரு புதிய கொள்கையை தமிழகத்தில் பி.ஜே உருவாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் அவர் கொள்கையைப் பின்பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இந்த நேரத்தில் சூனியம் பற்றிய ஹதீசை நம்பி வரும் மக்கா இமாமுக்குப் பின்னால் தொழலாமா? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த பி.ஜே "நமது ஆய்வுகள் அரபியில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறி பின்னரும் அந்த ஹதீஸ்களை நம்பினால் அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது" என்று சொல்கிறார்.


ஒரு கொள்கையை சொல்லக் கூடியவர் தன் கொள்கையில் தூய்மையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? தான் உண்மை என்று நம்பும் அந்த கொள்கையை தூய எண்ணத்துடன் பிரச்சாரம் செய்ய முற்பட வேண்டும். தம் ஆய்வு அரபியில் சவூதியில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்று கூறியவர் அதற்காக செய்த முயற்சிகள் என்னென்ன? 


சமீபத்தில் இவர் உம்ரா செல்லும் ஒரு வாய்ப்பைப் பெற்றார். சவூதி உலமாக்களை சந்தித்து தன் ஆய்வை சமர்ப்பிக்க ஓர் அருமையான வாய்ப்பு! சந்தித்தாரா? தன் ஆய்வை சமர்ப்பித்தாரா? சவூதி உலமாக்கள் திணறி பதில் சொல்ல முடியாமால் போனார்களா? இவரது ஆய்வை உண்மை என ஏற்றுக் கொண்டார்களா? இனி அவர்களின் பின்னால் நின்று தொழலாமா? இவர் அவர்களின் பின்னால் தொழுதாரா? தனியாகத் தொழுதாரா? இந்த நிகழ் கீற்று அதை விளக்குகிறது.

வியாழன், 13 ஜூன், 2013

இறைததூது (நுபுவ்வத்தில்) சந்தேகத்தை ஏற்படுத்தும் பி.ஜேயின் புதிய ஆய்வு!

சூனியமும் அதன் பாதிப்புகளும் பற்றி புகாரி, முஸ்லிம் உட்பட ஏராளமான அறிவிப்புகள் அடங்கிய ஹதீஸ்கள் வந்துள்ளன. அவை அத்தனையும் மறுக்கும் பி.ஜே தன் புதிய கொள்கையை நியாயப் படுத்த நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தையே கேள்விக்குறியாக்கும் ஆபத்தான ஒரு குறிப்பு இந்த நிகழ்படத்தில் பதிவு செய்திருக்கிறார். 

மாஷா அல்லாஹு வஷிஃத பற்றிய ஹதீசில் இல்லாத கற்பனையை உருவாக்கிய இவர் "ஆஹா, ஆமா, இந்த நுணுக்கமான விசயத்தை நாம கவனிக்காம விட்டு விட்டோமே" என்று ஹதீசில் இல்லாத வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் சொல்வதைப் போல குறிப்பிடுகிறார். இதன் மூலம் மார்க்கத்தில் இவர் நுணுக்கமான விசயத்தைக் கூட ஆய்வு செய்பவர் என்பது போலும் நபி (ஸல்) அவர்கள் கவனிக்காமல் விட்ட விசயங்களும் உண்டு என்பது போலும் ஒரு மாயையை சமுதாயத்தில் விதைத்துள்ளார்.

நபித்துவம் என்பது அல்லாஹ்வடமிருந்துள்ள வஹியின் அடிப்படையில் அமைந்தது. நபியே தெளிவு படுத்தாத விசயங்கள் உண்டு என்ற தோரணையை ஏற்படுத்தியதன் மூலம் அல்லாஹ்வின் ஏற்பாட்டை குறை கண்டுள்ளார். (அல்லாஹ்வே சரணம்)

இமாம் புகாரி போன்றவர்களிடம் இது (சூனியம் பற்றிய) ஆய்வு எடுத்து வைக்கப்பட்டு அவர்களளும் பதில் சொல்ல இயலாமல் திணறி தடுமாறினால்... என்ற வாசகம் இவரைத் தவிர எவரும் திணறி தடுமாறுபவர்கள்- அவர்கள் எவ்வளவு பெரிய இமாம்களாக இருந்தாலும் சரிதான் -- என்ற இறுமாப்புக் கொள்கை.

14 நூற்றாண்டுகளாக எவரும் தெளிவு படுத்தாத சூனியத்தில் இணைவைப்பு என்ற இவரது புதியஆய்வு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது, என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு முரண்படுகிறதே என்பதையேனும் இவரது அனுதாபிகளும் ஆதரவாளர்களும் பின்பற்றுபவர்களும் சிந்திக்கட்டும். அகப்பார்வையுடையோர்களே குழப்பம் நீங்கி தெளிவடைய இருபது நிமிடம் தந்து இந்த நிகழ்படக் கீற்றை காணுங்கள். தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் இந்த செய்தியை எடுத்துச் செல்லுங்கள். சத்தியத்தை சத்தியமாக அறிந்து பின்பற்ற அல்லாஹ்வே உதவி செய்வாயாக.

நபித்தோழர்கள் பற்றிய நிலைபாட்டில் தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்

நபித்தோழர்களைப் பின்பற்றுவது குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. ஹதீஸ்களும் உள்ளன. சத்திய மார்க்கத்தில் இருந்து தடம் புரண்ட பல குழுக்களை விவரிக்கும் ஹதீஸில் சரியான கூட்டத்தைப் பற்றி விளக்கிய நபி (ஸல்) அவர்கள் அது நானும் எனது தோழர்களும் இருக்கும் வழி என்று சுட்டிக் காட்டினார்கள் என்பது பிரபலமான ஹதீஸ் ஆகும். சத்தியப் பாதையிலிருந்து தடம் புரண்ட கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் என அனைவருமே நபித்தோழர்களைப் புறம் தள்ளினர். நபித்தோழர்கள் தடம் புரண்டு விட்டார்கள் என வாதிட்டனர். 

அந்த வரிசையில் இஸ்லாமிய வரலாற்றில் தமிழகத்தில் தடம் புரண்டு தனி ஜமாஅத்தை உருவாக்கியவர் பி.ஜே. பி.ஜே கொள்கை முழுக்க முழுக்க ஒரு சென்னை தயாரிப்பு ஆகும். சத்தியப் பாதையில் இந்தக் கொள்கைக்கு எள் முனையளவும் இடமில்லை. 

நபித்தோழர்கள் விசயத்தில் பி.ஜேயும் அவர் உருவாக்கிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பும் எவ்வளவு தூரம் தடம் புரண்டுவிட்டது என்பதை விளக்கும் அருமையான நிகழ் படம். காணத் தவறாதீர்கள்.

சனி, 8 ஜூன், 2013

சூனியத்தில் தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்

1990 களில் பி.ஜே எழுதிய இஸ்லாத்தில் பில்லி சூனியம் என்ற புத்தகம் அல் ஜன்னத் இதழிலும் தனிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அதில் சூனியம் சம்மந்தமாக குர்ஆன் ஹதசுக்கு உட்பட்ட கருத்தைத் தான் சொன்னார் பி.ஜே. பின்னர் தடம் புரண்டு கால வெள்ளத்தில் புதிய பரிணாமம் எடுத்த பி.ஜே கொள்கை சூனியம் பற்றிய ஹதீசை நம்பியவன் முஷ்ரிக் என்ற மிகவும் ஆபத்தான நிலையை எட்டியிருக்கிறது.  பி.ஜேயின் ஆய்வுக்கு ஒத்து வரவில்லையெனில் இமாம் புகாரி கூட முஷ்ரிக்தான் என்று நா கூசாமல் சொல்லும் பி.ஜேயின் சீடன் அப்துல் நாசா. சுப்ஹானல்லாஹ்!


இஸ்லாமில் பி.ஜே நட்டு வைத்த பித்அத் மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துள்ளார் மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி. இந்த நிகழ்படத்தை காணத் தவறாதீர்கள். அரிய உண்மைகள் அடங்கியுள்ளன.

வியாழன், 6 ஜூன், 2013

நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் பி.ஜே கொள்கை

அஸ்ஸலாமு அலைக்கும். பிஸ்மில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ். 

 இஸ்லாத்தில் பி.ஜே கொண்டு வந்த புதிய கொள்கைகளை சமுதாயத்தில் ஊடுருவச் செய்வதற்காக நபித்தோழர்களை கேவலப்படுத்தும் கேவலமான நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. கண்ணியத்திற்குரிய நபித்தோழர் அலீ (ரழி) அவர்களைக் குறித்து பி.ஜே ஒரு ஆதாரமற்ற செய்தியைச் சொல்கிறார். சொல்லும் போது அந்த நபித்தோழரை மிகவும் கிண்டலடிக்கிறார். அதவாது அறிவின் தலைவாயில் (அலி) என்று சொல்கிறார்களே, அப்படிப்பட்டவர் குர்ஆனை விளக்குவதில் தவறு செய்து விட்டார் என்று கிண்டல் செய்கிறார். அப்போது சிரிக்கிறார். கூட இருப்பவர்களும் சிரிக்கிறார்கள். 

சிரிப்பவர்களுள் அன்று இவரின் சிஸ்யராக இருந்து பின்னர் இவரால் ஓரங்கட்டப்பட்டு இப்போது அடையாளம் தெரியாமல் இருக்கும் அபூ ஆசியா என்ற சாகுல் அமீதும் ஒருவர். 

இவர்களெல்லாம் நபித்தோழரின் கண்ணியத்தை பரிகசித்து சிரித்ததற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். 

 இந்த நிகழ் கீற்றில் பி.ஜேயின் தப்புப் பிரச்சாரமும் அதற்கு உருக்கமாக மூத்த அறிஞர் நுஃபார் ஃபாருக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பதிலளிப்பதும் இடம் பெற்றுள்ளது. இதைப் பார்ப்பவர்கள் பி.ஜே மாயையில் உழன்று கொண்டிருப்பவர்களிடம் கொண்டு சேருங்கள்.