வெள்ளி, 4 மே, 2012

இப்னு அப்பாஸ் குறித்து யார் சொல்வது உண்மை?

இப்னு அப்பாஸ் குறித்து யார் சொல்வது உண்மை?

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நேரடி தர்பியாவில் வளர்க்கப்பட்டவர்கள்.  "யா அல்லாஹ் இவருக்கு  மார்க்கத்தில் ஞானத்தைக் கற்றுக்கொடு" என்று நபி (ஸல்) அவர்களால் சிறப்பாக துஆ செய்யப்பட்டவர்கள். (புகாரி: 3756)  குர்ஆனில் அவர்கள் பெற்ற ஞானத்தின் காரணமாக  உமர் (ரழி) போன்ற மூத்த ஸஹாபாக்களால் கூட முன்னிலைப் படுத்தப்பட்டவர் (புகாரி 4970)  குர்ஆன் தஃப்ஸீரில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் விளக்கத்தை முன்னிலைப் படுத்துகிறது முஸ்லிம் சமுதாயம். ஆம் அல்லாஹ்வின் தூதரால் சான்று வழங்கப்பட்டவர் அல்லவா? ஆனால் அந்தோ பரிதாபம்! ஸஹாபாக்கள் விமர்சனப்பட்டியலில் அவரும் விடுபடவில்லை.