திங்கள், 31 ஜனவரி, 2011

மவ்லவி.பி.ஜே அவர்களின் கொள்கை மாற்றம் - ஓர் எளிய உரையாடல்!

Mohammad Sheik:கேள்வி 4: சகோ.பீஜே ஜாக் எனும் அமைப்பில் இருக்கும் போது சலஃப் மன்ஹஜை பின்பற்றுவது தான் சரி என்று அல்ஜன்னத் மாத இதழில் எழுதி வந்தாரா அல்லது குர்ஆனும் நபிமொழியிம் மட்டுமே பின்பற்றத் தகுதியானவை என்று எழுதி வந்தாரா? (பழைய அல்ஜன்னத்தின் கடைசிப் பக்கத்தில் சபதம் ஏற்போம்என்று வரும் அதிலே என்ன சொல்லப்பட்டிருந்தது?

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி! அன்றும் இன்றும்!

தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி! அன்றும் இன்றும்!

Mohammed Sheik: சகோ. முஹம்மது அபூபக்க்ர் ஆலு அப்தில்லாஹ்விற்க்கான பதில் 1

பதில்: ங்கே பிரச்சினையில்  மூலக் கருவிலிருந்து திசை திருப்ப முதலில் யார் பிரச்சாரம் செய்தார், நானா நீயா? என்ற அடிப்படையில் வேறு திசைக்குக் கொண்டு செல்ல முயற்சி நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் தஹ்ஹீத் பிரச்சாரகர்களில் ஒருவராக இருந்த சகோ. பி.ஜே காலப் போக்கில் உண்மையான கொள்கையில் இருந்து தடம் புரண்டவர்!  இன்று அவரும் அவர் காலப்போக்கில் கண்ட இயக்கங்களுடன் சஞ்சரித்து இன்று ததஜ என்ற இயக்கத்தில் இருப்பவர்களும் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு கொள்கையில் ஏகத்துவம் பிரச்சாரம் செய்யப்பட்டதோ அந்த கொள்கையிலிருந்து தடம் புரண்டு சென்றார்கள் என்பதற்காகவே ஏகத்துவப் பிரச்சாரத்தைப் பற்றிய சில வராலற்றுச் செய்திகளைப் பதிந்தேன். அவற்றை இருட்டடிப்பு என்று கூறி கருத்துப் பதிவு செய்துள்ளார் சகோ. முஹம்மது ஷேக்!