வியாழன், 13 ஜூன், 2013

இறைததூது (நுபுவ்வத்தில்) சந்தேகத்தை ஏற்படுத்தும் பி.ஜேயின் புதிய ஆய்வு!

சூனியமும் அதன் பாதிப்புகளும் பற்றி புகாரி, முஸ்லிம் உட்பட ஏராளமான அறிவிப்புகள் அடங்கிய ஹதீஸ்கள் வந்துள்ளன. அவை அத்தனையும் மறுக்கும் பி.ஜே தன் புதிய கொள்கையை நியாயப் படுத்த நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தையே கேள்விக்குறியாக்கும் ஆபத்தான ஒரு குறிப்பு இந்த நிகழ்படத்தில் பதிவு செய்திருக்கிறார். 

மாஷா அல்லாஹு வஷிஃத பற்றிய ஹதீசில் இல்லாத கற்பனையை உருவாக்கிய இவர் "ஆஹா, ஆமா, இந்த நுணுக்கமான விசயத்தை நாம கவனிக்காம விட்டு விட்டோமே" என்று ஹதீசில் இல்லாத வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் சொல்வதைப் போல குறிப்பிடுகிறார். இதன் மூலம் மார்க்கத்தில் இவர் நுணுக்கமான விசயத்தைக் கூட ஆய்வு செய்பவர் என்பது போலும் நபி (ஸல்) அவர்கள் கவனிக்காமல் விட்ட விசயங்களும் உண்டு என்பது போலும் ஒரு மாயையை சமுதாயத்தில் விதைத்துள்ளார்.

நபித்துவம் என்பது அல்லாஹ்வடமிருந்துள்ள வஹியின் அடிப்படையில் அமைந்தது. நபியே தெளிவு படுத்தாத விசயங்கள் உண்டு என்ற தோரணையை ஏற்படுத்தியதன் மூலம் அல்லாஹ்வின் ஏற்பாட்டை குறை கண்டுள்ளார். (அல்லாஹ்வே சரணம்)

இமாம் புகாரி போன்றவர்களிடம் இது (சூனியம் பற்றிய) ஆய்வு எடுத்து வைக்கப்பட்டு அவர்களளும் பதில் சொல்ல இயலாமல் திணறி தடுமாறினால்... என்ற வாசகம் இவரைத் தவிர எவரும் திணறி தடுமாறுபவர்கள்- அவர்கள் எவ்வளவு பெரிய இமாம்களாக இருந்தாலும் சரிதான் -- என்ற இறுமாப்புக் கொள்கை.

14 நூற்றாண்டுகளாக எவரும் தெளிவு படுத்தாத சூனியத்தில் இணைவைப்பு என்ற இவரது புதியஆய்வு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது, என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு முரண்படுகிறதே என்பதையேனும் இவரது அனுதாபிகளும் ஆதரவாளர்களும் பின்பற்றுபவர்களும் சிந்திக்கட்டும். அகப்பார்வையுடையோர்களே குழப்பம் நீங்கி தெளிவடைய இருபது நிமிடம் தந்து இந்த நிகழ்படக் கீற்றை காணுங்கள். தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் இந்த செய்தியை எடுத்துச் செல்லுங்கள். சத்தியத்தை சத்தியமாக அறிந்து பின்பற்ற அல்லாஹ்வே உதவி செய்வாயாக.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.