புதன், 21 செப்டம்பர், 2011

ஸலஃபுக் கொள்கையும் பி.ஜே அவர்களின் பழய நிலைபாடும்!

கத்துவ எழுச்சியின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் நம்முடைய நல்லறிஞர்கள் எந்த கொள்கையில் நிலை கொண்டிருந்தார்களோ அதில் சகோ.பி.ஜே நின்றார். குர்ஆன் சுன்னா விஷயத்தில் ஸலஃபுகள் எங்கு நிறுத்தினார்களோ அங்கு நிறுத்த வேண்டும் என்ற உன்னத நிலைபாட்டின் அடிப்படையில் நமது பிரச்சாரம் அமைந்திருந்தது. குர்ஆன் சுன்னாவிலிருந்து ஸலஃபுகளைப் பிரிக்க முடியாது என்பதால் அது பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் அன்று ஏற்படவில்லை. ஆனால் பிற்காலத்தில் பி.ஜே அவர்கள் இந்த நிலைபாட்டிலிருந்து படிப்படியாகத் தடம் புரண்டதுடன் புதிய புதிய கொள்கைகளை குர்ஆன் சுன்னாவின் பெயரால் அறிமுகம் செய்தார். அது மக்கள் மத்தியில் எடுபடுவதற்காக ஸலஃபுகள் அளித்த விளக்கத்தை ஏற்க வேண்டும் என்றவர்களை மூன்றாவது அடிப்படையை ஏற்படுத்தியவர்கள் என்று சகட்டு மேனிக்கு விமர்சித்தார். குர்ஆன் சுன்னா என்று சொல்லிக் கொண்டே ஸஹீஹான ஹதீஸ்களை தனது அறிவுக்கு ஒத்து வராத காரணத்தால் நிராகரித்தார்.  சில ஹதீஸ்களுக்கு சுயமாக பொருந்தா விளக்கமளித்தார்.  பி.ஜே அவர்களின் இந்த நிலைபாடு நம்முடைய அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டபோது எதிர் தரப்பினரை ஸஹாபாக்களைப் பின்பற்றுபவர்கள் என்றும் அது கெட்ட கொள்கை என்றும் விமர்சித்து வருகிறார். அது மட்டுமனிறி 20 வருடமாக தான் இந்த நிலைபாட்டில் இருப்பதாகவும் தன்னுடைய எதிர் தரப்பினர்தான் புதிய நிலைபாட்டை எடுத்தவர்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறார். இவரைக் கண்மூடிப் பின்பற்றும் ஆதரவாளர்களும் உண்மை என்னவென்று ஆராயாமல் இதை அப்படியே பரபப்பி வருகின்றனர்.  ஆனாலும் உண்மை அவ்வாறல்ல. ஆரம்ப காலத்தில் ஸலஃபுகளின் விளக்கம் மார்க்கத்தின் முக்கிய அம்சம் என்ற நிலைபாட்டில்தான் பி.ஜே இருந்தார் என்பதற்கு அவரது எழுத்துக்கள் மற்றும் பேச்சிலிருந்து சில ஆதாரங்களை இப்பதிவின் மூலம் மக்கள் மன்றத்தில் வைக்க ஆசைப்படுகிறோம்.  அல்லாஹ்வின் உதவியால் சிலரேனும் இதைக் கொண்டு சிந்தித்து சத்தியக் கொள்கையின் பக்கம் வரலாம் என்று ஆதரவு வைக்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு உதவி செய்வானாக.



1986 கோட்டாரில் நடந்த முனாளராவில் A.L. பத்ருத்தீன் அவர்களுக்கு     
     மறுப்பளித்து பி.ஜே அவர்கள் பேசிய உரையிலிருந்து...

தலைப்பு: வசீலா தேடுதல்


"வசீலா என்பதற்கு அல்லாஹ் என்ன பொருள் தருகிறான்? அவனது தூதர் (ஸல்) அவர்கள் என்ன பொருளைத் தந்தார்கள்? என்பதையும், அவர்களிடம் பாடம் படித்த அருமை ஸஹாபாக்கள் என்ன பொருளை வசீலாவுக்கு வழங்கியிருந்தார்கள், நாற்பெரும் இமாம்கள், மிகப் பெரும் சிந்தனையாளர்கள் எல்லாம் இந்த வசீலாவுக்கு என்ன பொருளைக் கொடுத்திருந்தார்கள் என்பதில்தான் இங்கே கருத்து வேறுபாடு. அவர்கள் எல்லாம் எந்தப் பொருளில் வசீலா என்ற பதத்தைப் பயன்படுத்தினார்களோ அந்தப் பொருளில் இருந்து விலகி, இன்றைக்கு வசீலா என்பது ஏதோ ஒரு புது மாதிரியான ஒரு பொருளைத் தரக் கூடியதாக மறிவிட்டதே!"

மேற்கண்டவை பி.ஜே அவர்களின் உரை:

இதில் மிகவும் கவனிக்க வேண்டியது கடைசியில் உள்ள வரிகள்... கடைசி வரிகளை மீண்டும் கவனிக்க..

//அவர்கள் எல்லாம் எந்தப் பொருளில் வசீலா என்ற பதத்தைப் பயன்படுத்தினார்களோ அந்தப் பொருளில் இருந்து விலகி, இன்றைக்கு வசீலா என்பது ஏதோ ஒரு புது மாதிரியான ஒரு பொருளைத் தரக் கூடியதாக மறிவிட்டதே!"//

எதைக் குறித்து அன்று அவர் கவலைப் பட்டாரோ அதே நிலைக்கு அவரே மாறிவிட்டதை இன்று பார்க்கிறோமா இல்லையா? அன்று அவர் பேசிய பேச்சுக்களுக்கு எதிராக இன்று அவரது நிலைபாடுகள் இருக்கிறதா இல்லையா? ஸலஃபுகளின் விளக்கத்திற்கு மாறாக குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் பி.ஜே அவர்கள் எடுத்த நிலைபாடுகளை அன்று பி.ஜே அவர்கள் பேசிய இதே வார்த்தைகளைக் கூறி விமர்சனம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ள மனம் பதறுவது ஏன்?

ஆக 20 வருடமாக நாங்கள் இதே கொள்கையில் இருக்கிறோம், இதையே பிரச்சாரம் செய்து வருகிறோம் என்று பி.ஜே அவர்கள் கூறி வருவது சரியல்ல. ஆரம்ப காலத்தில் தமிழகம் கண்ட ஏகத்துவ எழுச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பி.ஜே அவர்களுக்கு தடம் புரளல் ஏற்பட்டது என்பது வெள்ளிடை மலை. அவர் சத்தியத்தின் பால் திரும்ப அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

உசாத்துணை:  கோட்டாற்றில் சத்திய முழக்கம் - பாகம் 1: அந்நஜாத் வெளியீடு 

தொடரும் இன்ஷா அல்லாஹ்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.